தாஜ்மஹால் இன்று முதல் மீண்டும் திறப்பு – சுற்றுலா பயணிகள் ஆர்வம்!
கொரோனா நோய்பரவல் நாட்டில் தற்போது சற்று குறைந்து வருவதால் நீண்ட நாட்களுக்கு பின்பு மீண்டும் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை காண சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.
தாஜ்மஹால்:
உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது தாஜ்மஹால். நாள் தோறும் தாஜ்மஹாலை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவார்கள். ஆனால் நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி – முதல்வர் துவக்கி வைப்பு!
இதன் காரணமாக மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 3700 சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நினைவு சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் சற்று குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பின்பு இன்று முதல் சுற்றுலா தலங்களை திறக்க மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது.
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு செம அப்டேட் – விரைவில் வெளியீடு!
இதன் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிக ஆர்வத்துடன் தாஜ்மஹாலை காண குவிந்து வருகின்றனர். அதன்படி ஒரு நாளைக்கு 650 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் இதற்கான டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.