தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்றே கடைசி நாள் – ரூ.2000 & மளிகைப் பொருட்கள் டோக்கன்!
தமிழகத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் நாளை (ஜூன் 15) முதல் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.
ரேஷன் கடை:
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காலத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நிவாரண நிதி ரூ.4000 (ரூ.2000+ரூ.2000) மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனை அடுத்து கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டது.
இரவு 8 மணிவரை கடைகள், மால்கள் திறக்க அனுமதி – ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தற்போது கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வருகிற 15ம் தேதி அதாவது நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் அதற்கான டோக்கன் விநியோகம் ஜூன் 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். மேலும் கொரோனா காலத்தில் மக்கள் நலன் கருதி டோக்கன்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதை அடுத்து தமிழகத்தில் டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் பெறுவதற்கான டோக்கன்கள் பெறுவதற்கு இன்றே கடைசி நாள். எனவே மக்கள் எவரேனும் டோக்கன்கள் பெறவில்லை எனில் உடனடியாக டோக்கன்கள் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.