இரவு 8 மணிவரை கடைகள், மால்கள் திறக்க அனுமதி – ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு ஹரியானா மாநில அரசு முழு ஊரடங்கு உத்தரவினை கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 21ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதில் கடைகள், மால்களை இரவு 8 மணிவரை திறந்திருக்க அரசு அனுமதியளித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
ஹரியானா மாநிலத்தில் இதுவரை 7,65,861 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 8,992 பேர் உயிரிழந்து உள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா குணமடைதல் விகிதம் 98.22 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்த தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் விகிதம் 8.05 சதவீதமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு ஊரடங்கு உத்தரவினை ஜூன் 21ம் தேதி காலை 5 மணிவரை நீட்டித்து உள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
- அதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், நூலகங்கள் தொடர்ந்து மூடப்படும்.
- அனைத்து கடைகளும் காலை 09:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.
- காலை 10:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை மால்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
- உணவகங்கள் மற்றும் பார்கள் காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 50% இருக்கை திறனுடன் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
- ஒரே நேரத்தில் 21 நபர்களுடன் மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
- கார்ப்பரேட் அலுவலகங்கள் தேவையான சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றி 50% ஊழியர்களுடன் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
- திருமண நிகழ்வுகள், இறுதி சடங்குகள் / தகனங்கள் 21 நபர்கள் வரை அனுமதிக்கப்படுகின்றன.
- திருமணங்கள், இறுதி சடங்குகள் / தகனங்களைத் தவிர மற்ற கூட்டங்களுக்கு, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை 50 ஆக இருக்கும். கூட்டங்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள துணை ஆணையரின் முன் அனுமதி தேவைப்படும்.
- கோல்ஃப் மைதானங்களின் கிளப் / உணவகங்கள் / மதுக்கடைகள் 50% இருக்கை வசதியுடன் காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
- ஜிம்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 06:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், ஸ்பாக்கள் மூடப்பட்டிருக்கும்.