ஜூன் 14 முதல் மாலை 5 மணிவரை கடைகளை திறக்க அனுமதி – மாநில அரசு முடிவு!
இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 14ம் தேதி முதல் கடைகள் திறப்பதற்கான நேரங்களை அதிகரித்து, மேலும் சில தளர்வுகளையும் அளிக்க இருப்பதாக மாநில அமைச்சரவை தனது அதிகாரபூர்வ டிவீட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் காரணமாக தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் மே மாதத்தில் அறிவிக்கப்பட்டு பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு தற்போது ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மாநிலத்தில் நேற்று 533 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 1.97 லட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 862 பேர் சிகிச்சையில் நேற்று குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 1.88 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
ஜூன் 17ம் தேதி டெல்லி செல்லும் முதல்வர் முக ஸ்டாலின்!!
நேற்று 15 நோயாளிகள் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,358 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் விகிதம் குறைந்ததை அடுத்து ஊரடங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் மேற்கொண்டனர். கூட்டத்தின் முடிவில், ஜூன் 14ம் தேதிக்கு பிறகு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50% பயணிகளுடன் பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள் நுழைவதற்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசு தேநீர் கடைகளுக்கு மாட்டு ஏன் அனுமதி அளிக்கவில்லை ?
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு ஆனால் தேநீர் உடலுக்கு கேடில்லையே ! ???