தமிழக பள்ளி ஆசிரியர்கள் ‘நல்லாசிரியர்’ விருதுக்கு விண்ணப்பிக்க அனுமதி!
தமிழகத்தில் மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள ஆசிரியர்கள், வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
நல்லாசிரியர் விருது:
ஆசிரியர்களை பாராட்டும் விதமாகவும், அவர்களது பணியை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டு தோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. திறமையான ஆசிரியர்களை ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுத்து மத்திய அரசு சார்பில் இந்த விருது வழங்கபடுகிறது. இதற்கு அந்தந்த மாநில பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். இந்த முறை 2 வருடங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு – என்னென்ன தளர்வுகள்?
இந்த ஆண்டு மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை, தமிழக அரசு விமர்சிக்கும் நிலையில் மத்திய அரசின் நல்லாசிரியர் விருதை பெற அனுமதி அளிக்குமா? என ஆசிரியர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் தகுதியான ஆசிரியர்களுக்கு மட்டுமே நல்லாசிரியர் விருதை வழங்கும் வகையில், நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய கல்வித்துறை கூறியுள்ளது. இதனை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் அனுமதி வழங்கி உள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கடந்த 2020ம் ஆண்டுக்கான, மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதை பெற தகுதியுள்ள ஆசிரியர்கள், http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளத்தில், நேரடியாக தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.