தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு – என்னென்ன தளர்வுகள்?

0
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு - என்னென்ன தளர்வுகள்?
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு - என்னென்ன தளர்வுகள்?
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு – என்னென்ன தளர்வுகள்?

தமிழ்நாட்டில்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுக்கும்‌ பொருட்டு அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 14 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும்‌ நிலையில்‌, நோய்த்‌தொற்றின்‌ தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும்‌, நோய்த்‌ தொற்று பரவாமல்‌ தடுத்து, மக்களின்‌ விலைமதிப்பற்ற உயிர்களைக்‌ காக்கும்‌ நோக்கத்திலும்‌, இந்த முழு ஊரடங்கு ஜூன் 14 முதல்‌ ஜூன் 21 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

இந்த ஊரடங்கின்‌ போது, அனைத்து மாவட்டங்களிலும்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌. நோய்த்‌ தொற்றுப்‌ பரவல்‌ கட்டுக்குள்‌ வந்திருந்தாலும்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில்‌ உள்ளவர்களின்‌ எண்ணிக்கை அதிகமாக உள்ளதைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, அதே சமயம்‌ பொதுமக்களின்‌ அத்தியாவசியத்‌ தேவைகளை பூர்த்தி செய்யும்‌ நோக்கத்துடனும்‌ தற்போது ஏறகனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்‌, மேற்காணும்‌ 11 மாவட்டங்களில்‌ கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும்‌ ஜூன் 14 முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

  • தனியார்‌ பாதுகாப்பு சேவை நிறுவனங்கள்‌ மற்றும்‌ அலுவலகம்‌, வீடுகள்‌ மற்றும்‌ அடுக்குமாடி குடியிருப்புகளில்‌ வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள்‌ இ-பதிவுடன்‌ அனுமதிக்கப்படும்‌.
  • மின்‌ பணியாளர்‌, பிளம்பர்கள்‌, கணினி மற்றும்‌ இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர்‌ மற்றும்‌ தச்சர்‌ போன்ற சுயதொழில்‌ செய்பவர்கள்‌ சேவை கோருபவர்‌ வீடுகளுக்குச்‌ சென்று பழுது நீக்கம்‌ செய்ய காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை இ- பதிவுடன்‌ அனுமதிக்கப்படுவர்‌, எனினும்‌ இவ்வகை கடைகள்‌ திறக்க அனுமதியில்லை.
  • மிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்ல) காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

TN Job “FB  Group” Join Now

  • வாடகை வாகனங்கள்‌, டாக்ஸிகள்‌ மற்றும்‌ ஆட்டோக்களில்‌ பயணிகள்‌ இ- பதிவுடன்‌ செல்ல அனுமதிக்கப்படும்‌. மேலும்‌, வாடகை டாக்ஸிகளில்‌, ஒட்டுநர்‌ தவிர மூன்று பயணிகளும்‌, ஆட்டோக்களில்‌, ஓட்டுநர்‌ தவிர இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க அனுமதிக்கப்படும்‌.
  • வேளாண்‌ உபகரணங்கள்‌, பம்பு செட்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்ல) காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • கண் கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 2 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!