பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டு பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அவர்கள் அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது அது குறித்து முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
நாடு முழுவதும் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் பணமதிப்பழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அந்த நேரத்தில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1,000 போன்றவை செல்லாது என அறிவிக்கப்பட்டன. அதற்கு பதிலாக புதிய வசதிகளுடன் கூடிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தியாவில் ஒரே நாளில் 6,148 பேர் கொரோனாவால் பலி – மத்திய சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
அந்த அறிவிப்பின் படி, பழைய நோட்டுகளை வங்கியில் திருப்பி கொடுக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்காக மக்கள் நீண்ட வரிசையில் வங்கிகளில் காத்திருந்தனர். அதே போல ஏடிஎம் மூலமாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை எடுக்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு தற்போது பணமதிப்பழிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2016 ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியான பின்னர் பலர் முறைகேடாக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிகளவில் வங்கிகளில் டெபாசிட் செய்ததாகவும், அவை கருப்புப் பணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நேரத்தில் வங்கிகளுக்கு வந்து டெபாசிட் செய்தவர்கள் விவரங்களை தெரிந்து கொள்ள அன்றைய நாளில் எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை பத்திரமாக வைக்கும்படி வங்கிகளுக்கு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் 2016 நவம்பர் 8 முதல் 2016 டிசம்பர் 30 வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை அழிக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
Hii
Is it possible to preserve 5year old recordings?
வெட்டி வேலை செய்யும் ஒரு அரசு