இந்தியாவில் ஒரே நாளில் 6,148 பேர் கொரோனாவால் பலி – மத்திய சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த வருடத்தை விட பாதிப்புகள் அதிகமாக உள்ளது. எதிர்பாராத அளவு உயிரிழப்புகளும் உயர்ந்து வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. சுகாதாரத்துறை, மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து தங்கள் ஆலோசனைகளை அரசுக்கு வழங்கி வருகின்றனர். அதிகரித்து வரும் தொற்று பரவலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொரோனா 2ம் அலையில் மட்டும் 8000 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கையை திருத்திய மாநிலம்!
நோயின் தீவிரம் பற்றி மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. முன்களப் பணியாளர்களை நியமித்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர் முழு ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு 1 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் கொரோனா நிலவரத்தை தினசரி காலை 9 மணிக்கு வெளியிட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்புஎண்ணிக்கை 2,91,83,121 ஆக உள்ளது. பாதிப்புகள் குறைந்த போதிலும் உயிரிழப்புகள் அதே நிலையில் உள்ளது. நாட்டில் புதிதாக 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு 3,59,676 ஆக அதிகரித்துள்ளது. தொடர் மருத்துவ சிகிச்சையால் குணமடைவர்களின் விகிதமும் அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,51,367 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 11,67,952 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் இதுவரை 24,27,26,693 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.