ஒரு ஆண்டுக்கு ரூ.36,000 – மத்திய அரசின் சூப்பர் திட்டம்! இணைவது எப்படி?
மத்திய அரசு நாட்டின் விவசாயிகளுக்காக புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அந்த திட்டத்தில் இணையும் முறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
மத்திய அரசின் அறிவிப்பு:
பிரதமர் மோடி அவர்கள் நாட்டின் விவசாயிகளுக்காக பல சிறப்பு திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளார். இதனால் விவசாயிகள் அதிகமான பலன்களையும் அடைந்து வருகிறார்கள்.
44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் கொள்முதல் – மத்திய அரசு உத்தரவு!
முன்னதாக பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பலனடைந்த விவசாயிகள், பிரதான் கிசான் மன் தன் யோஜனாவின் மூலமும் பயனடையலாம். பிரதான் கிசான் மன் தன் யோஜனா என்பது விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டமாகவும். இதன் மூலம் 12 மாதங்களும் ரூ.3,000 தவணையாக பெறலாம்.
திட்டத்தின் விவரங்கள்:
பிரதான் கிசான் மன் தன் யோஜனா திட்டத்தில் வயது வரம்பு 18 முதல் 40 வயது வரையில் உள்ளவர்கள் இணையலாம். இந்த திட்டத்தில் இணையும் விவசாயி மாதத்திற்கு 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் செலுத்த வேண்டும். https://maandhan.in/ என்ற என்ற இணையதளத்தின் மூலமாக திட்டத்தில் இணையலாம்.
ஆவணங்கள்:
ஆதார், வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்கள் மூலம் இந்த திட்டத்தில் இணையலாம். 18 வயதில் இணைபவர்கள் மாதம் ரூ.55 செலுத்த வேண்டும். 30 வயது விவசாயி மாதம் 110 ரூபாய் செலுத்த வேண்டும். 40 வயது விவசாயி 200 ரூபாய் மாதம் செலுத்த வேண்டும்.
TN Job “FB Group” Join Now
அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று கிசான் கடன் அட்டை படிவத்தினை பதிவிறக்கம் செய்து, நமது நிலத்தின் ஆவணங்கள் மற்றும் பயிர் குறித்த விவரங்களை படிவத்தில் நிரப்ப வேண்டும். நமது வங்கி கிளைக்கு சென்று இந்த படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.