நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 94.3% – மத்திய சுகாதாரத்துறை!!
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 94.3% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலவரம்:
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தடுப்பு பணிகளை மேற்கொண்ட போதிலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வந்தது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகம். இதனால் மாநிலங்கள் பலவற்றிலும் தொடர் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கொரோனா அதிகம் உள்ள பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அரசு அறிவித்து முழு கண்காணிப்பை வழங்கியது.
ஒரு ஆண்டுக்கு ரூ.36,000 – மத்திய அரசின் சூப்பர் திட்டம்! இணைவது எப்படி?
இந்த வைரசுக்கு எதிராக தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை மத்திய அரசு கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களில் வழங்கி வருகிறது. நேற்று பிரதமர் அவர்கள் காணொளியில், ஜூன் 21 முதல் கொரோனா தடுப்பூசி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்தது வருகிறது.
TN Job “FB Group” Join Now
நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 94.3% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தினசரி பாதிப்பு 68 நாட்களுக்கு பிறகு ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் கடந்த 3 வாரங்களில் 33% ஆக குறைந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 65% பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மே 7ஆம் தேதி உச்சம் தொட்ட நிலையில் தற்போது பாதிப்பு 79% குறைந்துள்ளது.