44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் கொள்முதல் – மத்திய அரசு உத்தரவு!
கொரோனா தடுப்பூசியை மாநிலங்கள் தோறும் இலவசமாக விநியோகம் செய்வதற்காக 44 கோடி கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தடுப்பூசிகள் கொள்முதல்
இந்தியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநிலங்கள் தோறும் கடந்த மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 7) நாட்டு மக்களுடன் உரையாற்றுகையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்கள் தோறும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புக்கு இறப்பு சான்றிதழ் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அந்த வகையில் ஜூன் 21 ஆம் தேதி முதல் மத்திய அரசின் அறிவிப்பின் படி, இலவச தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளது. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் மருந்துகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த தடுப்பூசிகள் அனைத்தும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை கிடைக்கும் எனவும் கூடுதலாக 30 கோடி பயோலாஜிக்கல் – இ தடுப்பு மருந்துகள் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்கும் என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் தடுப்பூசி தயாரிப்பதற்கு 30 சதவீத முன் பணத்தை சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.