கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை – எம்.பி வலியுறுத்தல்!
தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு விழுப்புரம் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
அரசு பணியில் முன்னுரிமை:
கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு பணியில் நியமனம் செய்யப்படுவது வழக்கம்.
‘தீபாவளி வரை விலையில்லா ரேஷன், ஜூன் 21 முதல் இலவச தடுப்பூசி’ – நாளை அமைச்சரவை கூட்டம்!
அந்த வகையில் அரசு பணிக்கான முன்னுரிமையின் அடிப்படையில் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கடந்த 1986 ஆம் ஆண்டு தமிழக அரசு ஆணையிட்டது. இதை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த திமுக அரசின் முயற்சியில், தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணிகளில் கலப்புத் திருமணம் செய்துள்ள 287 பேர் பணி நியமனம் பெற்றனர்.
TN Job “FB Group” Join Now
முன்னதாக அரசு பணியில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று 1986 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர் ஆணை பிறப்பித்தார். இந்த உத்தரவானது எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் நிறுத்தம் செய்யப்பட்டது. எனவே கலப்பு திருமண செய்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.