தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மறுஅறிவிப்பு வரும் வரை மூடல் – இயக்குனர் சுற்றறிக்கை!!
தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 14ம் தேதி வரை தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து நிர்வாக இயக்குனர் அவர்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையின் வேகத்தை குறைக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இதன் பின்பு கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 7ம் தேதி காலை 6 மணி முதல் முடிவுக்கு வர உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இது குறித்து ஆலோசனை மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலில் அவர்கள் ஜூன் 14ம் தேதி வரை தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு தெரிவித்தது. தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் – மகாராஷ்டிரா முதலிடம்!
மேலும் தற்போது டாஸ்மாக் கடைகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் தமிழகத்தில் மறுஅறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் மதுக்கடைகள் தொடர்ந்து மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.