தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் – மகாராஷ்டிரா முதலிடம்!
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் அதிகபட்சமாக செலுத்தப்பட்டு முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உத்தரபிரதேசம், அதனை தொடர்ந்து குஜராத் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2.86 கோடிக்கும் அதிகமாக உள்ளது. தற்போது இதற்கு தீர்வாக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 18 முதல் 45 வயது வரை உள்ளோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? புதிய தகவல்!!
அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள அரசு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. நேற்று ஒருநாள் மட்டும் இந்தியாவில் 36 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. இதில், 33,74,640 பேர் முதல் டோஸையும், 2,75,440 பேருக்கு இரண்டாவது டோசும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் சேர்த்து 22,78,60,317 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகபட்சமாக இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,36,68,323 டோஸ்கள் செலுத்தி மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு 1,98,38,197 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. குஜராத் மூன்றாம் இடத்தில் உள்ளது. அங்கு 1,79,24,919 டோஸ் தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.