தமிழகம் முழுவதும் கடைகள் திறக்க அனுமதி? அரசின் முடிவு என்ன!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்தில், மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வீடுகள் தோறும் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 31ம் தேதி முழு ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் கடைகள் திறக்க அரசு அனுமதி அளிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், மே 24 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக, கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு, காய்கறி உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக என பல புகார்கள் எழுந்துள்ளது. இதனால் கடைகளை மீண்டுமாக திறக்க அரசு அனுமதி கொடுக்குமா? என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் மே 31 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறைகளை நீட்டிப்பது குறித்து, முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், வர்த்தக சங்கத்தை சார்ந்தோர், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நிலையில் சென்னையில் வர்த்தகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘எங்கள் சங்கத்தின் சார்பில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஜூன் 7 வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு!!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் வர்த்தகர் சங்க பேரமைப்பு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். மேலும் தமிழக மக்களின் வீடுகளுக்கு பொருட்களை கொண்டு சேர்க்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 50 ரூபாய், 100 ரூபாய் என அனைத்து பொருள்களும் அடங்கிய காய்கறி தொகுப்பை வீடு தோறும் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்று (மே 28) மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது’ என தெரிவித்துள்ளார்.