மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு – முழு ஊரடங்கு எதிரொலி!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், முழு ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக இன்று நடைபெற இருந்த அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று (மே 24) முடிவடைய உள்ள நிலையில், தற்போது மேலும் 1 வாரம் ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இன்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறுவதாக இருந்தது.
தமிழகத்தில் இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு – மீறினால் கடும் நடவடிக்கை!!
ஆனால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீடிக்கப்பட்டுள்ளதால் இந்த கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் 2021 ஆம் ஆண்டுக்கான ஏப்ரல் மாத தேர்வுகள் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான இம்ப்ரூவ்மென்ட் தேர்வுகள் மே 5 முதல் 10 வரை நடைபெறுவதாக இருந்தது.
TN Job “FB Group” Join Now
மே 8 வரை ஆன்லைன் மூலமாக 4 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் மே 10 ஆம் தேதி முதல் மே 24 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு காரணமாக இந்த தேர்வுகள் மே 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மே 24 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீடிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார்.