மாலத்தீவிற்குள் நுழைய இந்திய பயணிகளுக்கு தடை – ஏப்ரல் 27 முதல் அமல்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது மாலத்தீவு சுற்றுலாத்துறை.
இந்திய பயணிகளுக்கு தடை:
கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா நோய் பரவல் தாக்கம் உயர்ந்து வருகிறது. இந்த நோய் தாக்கத்தினால் இந்தியா பெருமளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் தினமும் 3.50 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். 2 ஆயிரம் வரை உயிரிழப்பும் ஏற்படுகிறது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகளவு புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாக தாஜ்மஹால் போன்ற புகழ் மிக்க சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு பயணிகள் வருகையும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று காரணமாக இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய பெருங்கடலில் உள்ள சிறந்த சுற்றுலா தலமாக கருதப்படும் மாலத்தீவில் இந்திய பயணிகள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 27 முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
இது குறித்து மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஏப்ரல் 27 முதல் மாலத்தீவு பகுதிக்கு சுற்றுலா வரும் இந்திய பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இந்திய பயணிகள் மாலத்தீவுக்கு வந்து தங்குவதற்கோ, சுற்றிப்பார்ப்பதற்கோ அனுமதி இல்லை. எங்கள் சுற்றுலாவை பாதுகாக்க இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தனை காலமாக எங்களுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.