தமிழகத்தில் 9,10,11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – தனியார் பள்ளிகள் எதிர்ப்பு!!!
தமிழக அரசு நடப்பு ஆண்டில் 9 ,10, 11ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வை ரத்து செய்து அறிவிப்பு செய்ததற்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரசின் அறிவிப்பு:
தமிழக முதல்வர் நேற்று 9,10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார். இதனால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுத்தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் உயர்கல்வி பாதிப்புக்கு உள்ளாகும். 10ம் வகுப்பு தேர்வுகளை நடத்தாமல் 11ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் மாணவர்களை எந்த மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்க முடியும் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!
தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் அவர்கள் இது குறித்து கூறுகையில், இந்த ஆண்டு 11ம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாதவர்கள். இந்த ஆண்டும் பொதுத்தேர்வை ரத்து செய்தால் அவர்களுக்கு பொதுத்தேர்வு எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சந்திக்க வேண்டியது இருக்கும்.
மேலும், பொது நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கும் சிரமப்பட நேரிடும். எனவே, பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பை அரசு உடனே வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
வழக்கு:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் அருணன் அவர்கள், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் அளவிலாவது தேர்வு நடத்தி மதிப்பெண்களை பெற வேண்டும். தேர்வு ரத்து முடிவை அரசு மாற்றாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்