மே 1 முதல் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்?
வரவிருக்கும் மே மாதத்தில் ஈத் அல் பித்ர் பண்டிகை கால விடுமுறைகளை குவைத் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மே 1 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 9 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
தற்போது நடைபெற்று வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே மீதமிருக்கிறது. இந்த மாதத்தில் ஏகப்பட்ட பண்டிகைகள் காரணமாக சுமார் 10 நாட்கள் வரை பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கும் மே மாதத்தில் பண்டிகை காரணமாக சுமார் 9 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக குவைத் அரசு அறிவித்துள்ளது. அதாவது, மே மாதத்தில் ஈத் அல் பித்ர் பண்டிகை வருவதால் வழக்கமான விடுமுறைகள் இம்முறை 9 நாட்களுக்கு அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இஸ்லாமிய நாடான குவைத்தில் ஈத் அல் பித்ர் பண்டிகையானது மே 1 ஆம் தேதி தொடங்கி மே 5 ஆம் தேதி முடிவடையும் என்று குவைத்தின் சிவில் சர்வீஸ் கமிஷன் (சிஎஸ்சி) அறிவித்துள்ளது. இப்போது பண்டிகை விடுமுறையாக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு மே 7ம் தேதி வரை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மே 8 ஆம் தேதி முதல் அவர்கள் மீண்டும் பணியைத் தொடங்குவார்கள் என்று CSC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தவிர ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் 9 நாட்களுக்கு ஈத் விடுமுறையை கொண்டாடலாம். இருப்பினும் விடுமுறை நாட்களில் சிறப்பு வேலை நேரங்களைக் கொண்ட மாநில அதிகாரிகள் தங்கள் பணி நேரத்தை பொது நலனுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் குவைத்தில் உள்ள நிபுணர்கள் மற்றும் வானியல் மையங்கள் ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பை நிறைவு செய்யும் என்றும், ஈத் அல் பித்ரின் முதல் நாள் மே 2 ஆம் தேதி என்றும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.