விரைவில் அமலாகும் 8 வது ஊதியக்குழு – அடிப்படை சம்பளம் உயர்வால் ஊழியர்கள் மகிழ்ச்சி!
மத்திய அரசின் ஊழியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, விரைவில் 8 வது ஊதியக்குழு அமலாக உள்ளது.
8 வது ஊதியக்குழு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் புதிதாக எட்டாவது ஊதிய குழு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகிறது.
பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை – விரைவில் அமல்படுத்துங்கள்.. முதல்வரிடம் கோரிக்கை!
எட்டாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் குறிப்பிட்ட விகிதம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிட்மென்ட் ஃபேக்டர் காரணியும் உயர்த்தப்படும். தற்போது 2.57% பிட்மென்ட் பாக்டர் உள்ள நிலையில் புதிய ஊதியக்குழு அமலாகும்போது இதன் விகிதம் உயர்த்தப்படும். மேலும் ஊழியர்களின் அடிப்படை சம்பளமானது ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.26 ஆயிரம் ஆக உயர்த்தப்படும்