பள்ளிகளில் 8,000 ஒப்பந்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ரத்து – அசாம் மாநில கல்வித்துறை அறிவிப்பு!

0
பள்ளிகளில் 8,000 ஒப்பந்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ரத்து - அசாம் மாநில கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிகளில் 8,000 ஒப்பந்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ரத்து - அசாம் மாநில கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிகளில் 8,000 ஒப்பந்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ரத்து – அசாம் மாநில கல்வித்துறை அறிவிப்பு!

அசாம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் சர்ப சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) கீழ் ஒப்பந்த கல்வியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் 8,000 பள்ளி ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய இருப்பதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் ரத்து:

அசாம் மாநில தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பல பள்ளிகள் இயங்கி வருகின்றனர். இந்த பள்ளிகளில் சர்ப சிக்ஷா அபியான் (SSA) கீழ் ஏராளமான ஒப்பந்தக் கல்வியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் காலியாக உள்ள 8,000 பள்ளி ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய இருப்பதாக அசாம் அரசு அறிவித்துள்ளது. அதனால் ஒப்பந்த ஆசிரியர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இது குறித்து கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2023 டிசம்பர்-க்குள் அனைத்து கிராமங்களிலும் 4G சேவை – மத்திய அமைச்சர் உறுதி!

Exams Daily Mobile App Download

அதில், 2020 ஆம் ஆண்டில் மாநில அரசு கீழ் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் SSA இன் கீழ் பணிபுரியும் 11,206 ஒப்பந்த ஆசிரியர்களுக்கு வழக்கமான ஊதியம் மற்றும் பிற சலுகைகளை அரசு வழங்கியது. ஆனால் தற்போது வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு கல்வித்துறையில் போலி மற்றும் நிதி நடுநிலைமையைத் தவிர்ப்பதற்காகவும் 8000 ஆசிரியர் இடங்களை காலியாக வைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தாலும் , ஒப்பந்த ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வரை நீண்ட காலம் பணியில் இருக்கலாம் என்ற அறிவிப்பையும் அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!