தமிழகத்தில் 75% வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே, அரசுப்பணி தேர்வில் திருத்தங்கள் – முக்கிய கோரிக்கை!

0
தமிழகத்தில் 75% வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே, அரசுப்பணி தேர்வில் திருத்தங்கள் - முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் 75% வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே, அரசுப்பணி தேர்வில் திருத்தங்கள் - முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் 75% வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே, அரசுப்பணி தேர்வில் திருத்தங்கள் – முக்கிய கோரிக்கை!

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வை மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் எழுதலாம் என்றுள்ள சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அரசுப்பணி:

தமிழகத்திலேயே படித்த இளைஞர்கள் பலர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். மிகவும் குறைந்த கல்வித் தகுதியான 8ம் வகுப்பு படித்திருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கான காலிப்பாணியிடத்திற்கு எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.பில்., பட்டதாரிகள் பலர் விண்ணப்பிக்கும் சூழல் நிலவை வருகிறது. அந்த அளவிற்கு வேலை இல்லாமல் பட்டதாரிகள் கடும் துயரில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தீபாவளி ஸ்பெஷல்!

கடந்த 2016ம் ஆண்டு அதிமுக அரசு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெளி மாநிலத்தவரும் கலந்து கொள்ளலாம் என்று சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது. இவர்கள் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளி மாநிலத்தவரும் போட்டித் தேர்வில் பங்கேற்க விதிகளில் திருத்தம் செய்திருப்பது முற்றிலும் நியாயமற்றது என்று பல தரப்புகளில் இருந்தும் கடும் புகார்கள் எழுந்து வருகிறது.

TNPSC 50 காலிப்பணியிடங்கள் – நவ.6ல் தேர்வு, விரைவில் ஹால் டிக்கெட் வெளியீடு!

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அரசு பணி தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிற மாநிலத்தவர்கள் தமிழக அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதை அனுமதிக்கும் சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழக தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க சட்டம் தேவை என்றும் வேல்முருகன் எம்.எல்.ஏ. தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!