TNPSC 50 காலிப்பணியிடங்கள் – நவ.6ல் தேர்வு, விரைவில் ஹால் டிக்கெட் வெளியீடு!
TNPSC சார்பில் நடத்தப்படும் உதவி அரசு வழக்கறிஞர் பதவிக்கான தேர்வுகள் வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி நடத்தப்பட இருக்கும் நிலையில் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) உதவி அரசு வழக்கறிஞர் பதவிக்கு நவம்பர் 6 ஆம் தேதி தேர்வுகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கான ஆட்சேர்ப்புகளின் ஆரம்ப கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு தகுதி பெறுவார்கள் என்று அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கபட்டபடி விண்ணப்ப பதிவுகளை வெற்றிகரமாக பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தேர்வில் பங்கேற்க அனுமதி அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கான பொங்கல் பரிசு, புதிய ஜாக்பாட் திட்டங்கள் – முதல்வர் முக ஸ்டாலின்!
இப்போது நவம்பர் 6ம் தேதி நடைபெற இருக்கும் தேர்வுகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் வைத்து மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஆனால் மெயின் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும். இது தொடர்பாக TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி அரசு வழக்கறிஞர் பதவிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட் www.tnpscexams.in மற்றும் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
Best TNPSC Coaching Center – Join Now
இந்த நுழைவுசீட்டுகளை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவிர சேர்க்கைக்கான கடிதம் தபால் மூலம் அனுப்பப்படாது. விண்ணப்பதாரர்கள் சேர்க்கை குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறிவுறுத்தலுக்கும் இணங்கி தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது உதவி பொது வழக்கறிஞருக்கான தேர்வுகள் மூலம் மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு பொது சேவையில் நிரப்பப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.