தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தீபாவளி ஸ்பெஷல்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தீபாவளி ஸ்பெஷல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தீபாவளி ஸ்பெஷல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தீபாவளி ஸ்பெஷல்!

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மாலை 8 மணி வரை இயங்க உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் கடைகள்:

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் கூட ரேஷன் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான அரசு பணியாளர்கள் இந்த காலகட்டத்தில் வேலைகள் ஏதும் இல்லாமல் மாதாமாதம் சம்பளம் பெற்று வந்தனர். ஆனால் அந்த இக்கட்டான நிலையிலும் ரேஷன் ஊழியர்கள் தங்களது பணியை சிறப்பாக ஆற்றி வந்தனர். இதனால் பெரும்பாலான ரேஷன் ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தற்போது அவர்களது குடும்பத்தார் பெரும் கஷ்டத்தில் இருந்து வருகின்றனர். அவர்களின் நலன் கருதி தமிழக அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் கொடுத்து உதவி செய்து வருகிறது.

தமிழக மக்களுக்கான பொங்கல் பரிசு, புதிய ஜாக்பாட் திட்டங்கள் – முதல்வர் முக ஸ்டாலின்!

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் மட்டுமே அரசு அறிவிக்கின்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. அதாவது மாநில அரசு அறிவித்த ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 என்பது கூட ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு பொது விநியோகத்தின் அடிப்படையில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கி வருகின்றன. அதாவது நவம்பர் 4ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு கிடையாது – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் கூடுதல் நேரம் இயங்க கடந்த அக்-11ம் தேதி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் அம்மாதத்தின் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுதல் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதா? என்று உரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!