தமிழகத்தில் புதிதாக 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் முக ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இன்று நடைபெற்ற கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.34,723 கோடிக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் மாநாடு:
தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக பலரும் தங்களை வேலையை இழந்துள்ளனர். இந்நிலையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில் ரூ.34,732 கோடிக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
சேலத்தில் நவ.26 தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 8ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை!
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிட்டத்தட்ட 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 3928 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலம் 3,944 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாநாட்டில் 13,500 கோடி மதிப்பிலான 13 புதிய நிறுவனங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது.
Wipro நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பம் பற்றிய முழு விவரங்கள்!
இதன் மூலம் 11,681 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வான்வழி, பாதுகாப்பு துறை புத்துணர்வு ஒப்பந்தம் 7 நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படவுள்ளது. 485 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் நிறுவனம் மூலம் 1960 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.