பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை – 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு

0
பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை - 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு
பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை - 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு
பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை – 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு

உத்திரப்பிரதேச மாநிலத்தில், வரும் ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளுக்கு 7 நாட்கள் வரை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விடுமுறை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

7 நாட்கள் விடுமுறை:

இந்தியா முழுவதும் கொரோனா தாக்கம் ஓய்ந்து கடந்த சில மாதங்களாக தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் விடப்படம் விடுமுறைக்கு நாட்காட்டி வெளியிடப்படுவது வழக்கம் தான். அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநில அரசு வரும் ஏப்ரல் மாதத்திற்கான பள்ளி விடுமுறை நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏழு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை தினங்கள்!

இந்த ஏழு நாட்களில் நான்கு நாட்களுக்கு ஞாயிறு விடுமுறைகள் ஆகும். ஏற்கனவே கொரோனா பரவலால் பல மாதங்களில் பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டு இருந்தது. மேலும் வரும் ஏப்ரல் மாதத்திலும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது UP வாரியத்தின் 2022 கல்வி நாட்காட்டியின் படி, மூன்று விடுமுறைகள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 2ம் தேதி இந்து புத்தாண்டு மற்றும் ஏப்ரல்13 ம் தேதி பைசாகி, ஏப்ரல் 14ம்தேதி அபண்டேகர் ஜெயந்தி மற்றும் ஏப்ரல் 15ம் தேதி புனித வெள்ளி என தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளன. பின்னர் ஏப்ரல் 3 – ஞாயிறு, ஏப்ரல் 10 – ஞாயிறு ஏப்ரல் 17 – ஞாயிறு,ஏப்ரல் 24 – ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை ஆகும்.

இதை தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 24ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளன, இதனால் 11 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மே 21 முதல் ஜூன் 30 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை இருக்கும். மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஜூன் 30 வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!