தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை தினங்கள்!
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அடுத்தாக தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறையும் அறிவித்துள்ளது தமிழக அரசு. அதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
கோடை விடுமுறை:
தமிழ்நாட்டில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு கண்டிப்பான முறையில் பொதுத் தேர்வுகள் நடக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவித்தது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
காவல்துறையில் கான்ஸ்டபிள் உட்பட 431 காலிப்பணியிடங்கள் – தேர்வு முடிவுகள் இழுபறி!
அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மே 13 வரை வகுப்புகள் நடைபெறவுள்ளன. அதன் பின்னர் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஜூன் 13ஆம் தேதி வகுப்புகள் துவங்க உள்ளது. அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.