நாட்டில் இன்று ஒரே நாளில் 6,809 பேருக்கு கொரோனா உறுதி – அதிர்ச்சி ரிப்போர்ட்!

0
நாட்டில் இன்று ஒரே நாளில் 6,809 பேருக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சி ரிப்போர்ட்!
நாட்டில் இன்று ஒரே நாளில் 6,809 பேருக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சி ரிப்போர்ட்!
நாட்டில் இன்று ஒரே நாளில் 6,809 பேருக்கு கொரோனா உறுதி – அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

கொரோனா பரவல்

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி உள்ளிட்டவை காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனா பாதிப்பால் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தொற்றால் 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 50000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் – முழு விவரம் இதோ!

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் இன்று புதிதாக 6,809 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4,44,56,535 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,27,991 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பால் 55,114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

அதன்படி தற்போது சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.12% ஆக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து இதுவரை கொரோனா நோயால் 4,38,73,430 பேர் மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் விகிதம் 98.69% ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 19,35,814 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2,13,20,43,050 ஆக அதிகரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!