மத்திய அரசு சார்பில் ரூ.6000 ஊக்கத்தொகை – ஆதார் கார்டு சரிபார்க்க அழைப்பு விடுப்பு!
மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக விவசாயிகள் நலன் கருதி கிசான் சம்மான் நிதித் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
ஊக்கத்தொகை
இந்தியாவில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக விவசாயிகளுக்காக கிசான் சம்மான் நிதித் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நிலமுள்ள விவசாயிகள் இணைவதால் அவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி ஒரு ஆண்டுக்கு 6000 வரை வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 1,62,000 விவசாயிகள் பயனடைகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
UPSC 33 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
இந்தியாவில் இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை 11வது தவணை வழங்கப்பட உள்ளது. இந்த தொகையை பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் எண்ணை சரிபார்க்க வேண்டியது அவசியமானதாகும். அதன்படி ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் இணையதளத்தில் சென்று ஆதார் எண்ணை உள்ளிட்டால் விவசாயிகளின் முழு விபரங்களும் கணினி திரையில் காண்பிக்கப்படும்.
மாநிலம் முழுவதும் மீண்டும் இரவு ஊரடங்கு அமல் – அரசின் புதிய தளர்வுகள் அறிவிப்பு!
மேலும் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் பொது இ-சேவை மையங்களின் மூலமாக ஆன்லைன் முறையில் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்கலாம். இதனை இணைத்த பின்பு இணையதளத்தில் சென்று தங்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டும். இதையடுத்து இதற்கு கட்டணமாக 15 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதனை வருகிற 28ம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும் என்றும் அதன்பின்பு தான் விவசாயிகளுக்கு 11வது தவணை தொகையான 2000 ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு அவர்கள் தெரிவித்துள்ளார்.