UPSC 33 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
மத்திய அரசின் ஸ்டோர் ஆபீசர் மற்றும் இதர பணிகளுக்கு UPSC தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் மத்திய அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் 5000 காலிப்பணியிடங்கள் SSC தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SSC தேர்வை தொடர்ந்து மத்திய அரசில் பெரும்பாலன பணியிடங்கள் UPSC தேர்வின் மூலம் நிரப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டில் 861 காலிப்பணியிடங்கள் UPSC தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மீண்டும் இரவு ஊரடங்கு அமல் – அரசின் புதிய தளர்வுகள் அறிவிப்பு!
UPSC தேர்வின் முதல் நிலை தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் UPSC ஸ்டோர் ஆபீசர் மற்றும் இதர பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. உதவி பேராசிரியர் – 8 காலிப்பணியிடங்கள் ஸ்டோர்ஸ் அதிகாரி – 11 காலிப்பணியிடங்கள் உதவி கனிம பொருளாதார நிபுணர் 14 காலியிடங்கள் என் மொத்தம் 33 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் upsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 3 ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – அரசாணை வெளியீடு!
முழுமையாக சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை அச்சிடுவதற்கு மார்ச் 4 கடைசி தேதியாகும். விண்ணப்பதாரர் அறிவிப்பை முழுமையாக படித்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும். படிவத்தில் ஏதேனும் முரண்பாடு கண்டறியப்பட்டால், விண்ணப்பப் படிவம் நிராகரிக்கப்படும். உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பிற பதவிகளுக்கு ரூ. 25 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.