அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறையில் மாற்றம் – 60:40 வெயிட்டேஜ் அமைக்க பரிந்துரை!
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத் துறைகள் உட்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்குமான தேர்வுகளில் ஒரே மாதிரியான 60%: 40% வெயிட்டேஜ் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தேர்வு வெயிட்டேஜ்
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை நிர்வகித்து வரும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அதனுடன் இணைந்த கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத் துறைகள் உட்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் வெளிப்புற அதாவது செமஸ்டர் தேர்வு மற்றும் உள் தேர்வு அதாவது துறைநிலைத் தேர்வுகள் ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான 60% : 40% வெயிட்டேஜ் அளவை அமைக்க பரிந்துரை செய்துள்ளது. இதில் செமஸ்டர் மற்றும் உள் தேர்வுகள் இரண்டும் தலா 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு – நகைப்பிரியர்களுக்கு நல்ல வாய்ப்பு!
தொடர்ந்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் 60 சதவீதத்துக்கும், உள் தேர்வு மதிப்பெண்கள் 40 சதவீதத்துக்கும் மாற்றப்படும். மேலும் செமஸ்டர் மற்றும் உள் துறைத் தேர்வுகள் இரண்டுமே விண்ணப்பதாரரின் இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு, அண்ணா பல்கலையுடன் இணைந்த கல்லூரிகள் 80%: 20% என்ற வெயிட்டேஜ் அமைப்பை கொண்டிருக்கின்றன.
அதே நேரத்தில் செமஸ்டர் மற்றும் உள் துறைதேர்வுகளுக்கு தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக துறைகள் 60%: 40% மற்றும் 50%: 50% வெயிட்டேஜ் முறையை பின்பற்றுகின்றன. இதற்கிடையில் கடந்த வாரம் நடைபெற்ற கல்விக் கவுன்சில் கூட்டத்தில் முன்மொழியப்பட்டபடி, அனைத்து பொறியியல் படிப்புகளிலும் கோட்பாடு மற்றும் நடைமுறைத் தாள்களுக்கு 60%: 40% வெயிட்டேஜ் வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. கோட்பாடு மற்றும் நடைமுறை கூறுகளைக் கொண்ட தாள்களில் செமஸ்டர் மற்றும் உள் தேர்வுகளுக்கு 50%: 50% வெயிட்டேஜ் இருக்கும்.
பல்கலையுடன் இணைந்த கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதை காரணம் காட்டி, தமிழகத்தில் உள்ள சுயநிதி தொழில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு அனைத்து கல்லூரிகளுக்கும் வெளி மற்றும் உள் தேர்வுகளுக்கு ஒரே மாதிரியான வெயிட்டேஜை பின்பற்றுமாறு மாநில அரசுக்கு மனு அளித்துள்ளது. ஆனால் இது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, அனைத்து கல்லூரிகளுக்கும் சீரான விகிதம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்ற தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – திறன் சாரா ஊக்கத்தொகை! முழு விபரம் இதோ!
இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள், வெயிட்டேஜ் அமைப்பு தனியார் கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மட்டுமே உதவும் என்று தெரிவித்துள்ளனர். இது தவிர அந்த கூட்டத்தில் 2021-22ம் கல்வியாண்டு முதல் 400க்கும் மேற்பட்ட இணை கல்லூரிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முன்மொழிந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் கீழ், BE அல்லது B.Tech பட்டப்படிப்பு AICTE பாடத்திட்டத்தின்படி 185 வரவுகளிலிருந்து 160 வரவுகளாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.