மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – திறன் சாரா ஊக்கத்தொகை! முழு விபரம் இதோ!
மத்திய அரசின் குரூப் சி ஊழியர்கள் மற்றும் குரூப் பி இன் நிர்வாகம் சாரா ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு திறன் சாரா ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு ஊக்கத்தொகை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது குரூப் சி ஊழியர்கள் மற்றும் குரூப் பி-யின் நிர்வாகம் சாரா ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கடந்த நிதியாண்டுக்கான திறன் சாரா ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் செலவினத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு | மும்பை லோகமான்ய திலக் – மதுரை வாராந்திர சிறப்பு சேவை மாற்றம்!
அதில் மத்திய அரசின் குரூப் சி பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள், குரூப் பி பிரிவின் நிர்வாகம் சாரா ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கடந்த 2020-21 நிதியாண்டுக்கான திறன் சாரா ஊக்கத்தொகை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய துணை ராணுவப் படையினர், ஆயுதப் படையினர் ஆகியோருக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் ஊக்கத்தொகை கணக்கீட்டு உச்சவரம்பு ரூ.7,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அக்.25, 26 இல் போட்டிகள்!
மேலும் சராசரி ஊதியம், கணக்கீடு உச்சவரம்பு ஆகியவற்றில் எது குறைவாக உள்ளதோ அதனடிப்படையில் ஊக்கத்தொகை நிர்ணயிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாா்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி பணியில் இருந்த ஊழியா்களும் தொடர்ந்து 6 மாதங்கள் பணியாற்றிய ஊழியர்கள், திறன் சாரா ஊக்கத்தொகை பெறத் தகுதியுடையவர்கள் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ராஜினாமா செய்த ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.