‘பள்ளிக்கு வந்துள்ளேன், கதவை திறக்க சொல்லுங்க’ – 6 வயது சிறுவனின் சிலிர்க்க வைக்கும் செயல்!
கொரோனா காரணமாக அளிக்கப்பட்டுள்ள தொடர் விடுமுறையினால் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் சூழலில், 6 வயது மாணவன் ஒருவன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிக்கும் சம்பவம் நடந்துள்ளது.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த ஆண்டு முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது ஒரு வருட காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவும், அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்களை நடத்தி வந்தன. பொதுவாக விடுமுறை என்றாலே அதிக சந்தோசப்படும் மாணவர்கள் கூட இந்த தொடர் விடுமுறையினால் சோகத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 9 சதவீத பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி – ஷாக் ரிப்போர்ட்!
பள்ளியின் சூழல், நண்பர்களுடன் விளையாடுவது போன்ற அனைத்தையும் நினைத்து மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தைச் சேர்ந்த நித்தின் ராஜ் (6) எனும் சிறுவன் மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், “நான் பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளிக்கு அழைத்து செல்லுங்கள்” என்று பெற்றோரிடம் அடம் பிடித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அவர்களும் பள்ளி இன்னும் திறக்கவில்லை, திறந்த பின்னர் செல்லலாம் என்று சமாதானப்படுத்தி வந்துள்ளனர். நேற்று முன்தினம், திடீரென்று தனது சகோதரனின் சீருடைகளை அணிந்து கொண்டு, புத்தகப்பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்றுள்ளான். பள்ளி மூடியுள்ளதால் அங்கு இருந்த மக்களிடம், ‘நான் பள்ளிக்கு வந்துள்ளேன், கதவை திறக்கச் சொல்லுங்கள். நான் உள்ளே செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார். சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சமாதானம் செய்து சிறுவனை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.