நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இலவச WiFi – புதிய மைல்கல்!!
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் இலவச WiFi வழங்கும் திட்டத்தில் இதுவரை 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் அந்த இலக்கை எட்டியுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இலவச WiFi:
இந்தியாவில் செயல்பட்டு வரும் பெருநகர ரயில் நிலையங்களில் இலவச WiFi வழங்கும் திட்டத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் முக்கிய ரயில் நிலையங்களில் இந்த இலவச WiFi திட்டம் அமல்படுத்தப்பட்டு, இதுவரை 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் இலவச WiFi பொருத்தப்பட்டுள்ளது.
அரசு, தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – NEFT சேவை நிறுத்தம்!!
அதாவது ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான பயணிகளுடன் இயங்கி வரும் 400க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் WiFi செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகள் தங்களது நேரத்தை செலவிடுவதற்கு வசதியாக இந்த திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டம் முதலாவதாக மும்பை ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வந்தது.
TN Job “FB Group” Join Now
அதன் படி இலவச WiFi இணைப்பானது மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாபூர் ரயில் நிலையத்தில் பொறுத்தப்பட்டவுடன் 5 ஆயிரம் என்ற இலக்கை அடைந்தது. இந்நிலையில் கடைசியாக கடந்த 15 ஆம் தேதி ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள ஜரபாடா ரயில் நிலையத்தில், WiFi இணைப்பு பொருத்தப்பட்டது. இதன் அடிப்படையில் இலவச WiFi இணைப்பு இதுவரை 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.