ஏர்டெல் (Airtel) பயனர்களுக்கு செம அறிவிப்பு – இலவச ரீசார்ஜ் பேக்!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5.5 கோடி செலவில் இலவச ரீசார்ஜ் பேக் அறிமுகம் செய்துள்ளது.
இலவச ரீசார்ஜ் பேக்:
இந்தியாவின் தொலைத்தொடர்பு முன்னணி நிறுவனமான ஏர்டெல் பிப்ரவரி மாதம் வரை 34 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தொலைபேசி சேவை, தொலைத்தொடர்பு இணைப்பு போன்ற சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. போஸ்ட்பெய்டு, ப்ரீபெய்டு என இரண்டு சேவைகளையும் வழங்குகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது புதிதாக வாடிக்கையாளர்களுக்கு ரூ.279, ரூ.179 போன்ற ரீசார்ஜ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புடன் ஆயுள் காப்பீட்டு சலுகையையும் வழங்குகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் குறைந்த வருவாய் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இலவச WiFi – புதிய மைல்கல்!!
இது குறித்து ஏர்டெல் நிறுவனம் கூறுகையில், கொரோனா தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் வருவாய் இல்லாமல் தவிப்போருக்கு இலவச ரீசார்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.49 மதிப்பிலான கூப்பன், 5.5 கோடி கிராமப்புற மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதில் ரூ.38 க்கு டாக்டைம் வழங்கப்படும். அதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். இந்த சலுகைகளை அடுத்த வாரம் முதல் பெறலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Recharge 💐💐💐💐
Airtel pack
வரவேற்கின்றேன்.
எனக்கு 49 ரூபாய் pack தேவை.இந்த இலவச சலுகை அளித்துள்ள Airtel க்கு மிக்க நன்றி.