வேறு லெவலுக்கு மாறப்போகும் இந்தியா.. நாட்டின் முக்கிய திருப்பம் .. 5ஜி சேவைகள் இன்று அறிமுகம்!
இந்தியாவில் இன்று (01-10-2022) பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளார். இதன் மூலம் நாட்டில் இணைய சேவைகள் அனைத்தும் மிகவும் அதிவேகத்தில் கிடைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
5G சேவை அறிமுகம்:
இந்தியாவில் இதுவரை 4ஜி இணைய சேவைகள் தான் அதிகபட்ச வேகம் கொண்டவையாக இருந்தது. ஆனால், பல கட்ட சோதனைகளுக்கு பிறகு, அதை விட 20 மடங்கு வேகம் கொண்ட 5ஜி சேவையை இன்று பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்கிறார். டெல்லியில் இன்று நடக்க உள்ள இந்திய மொபைல் காங்கிரஸில் (IMC) இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. அக்டோபர் 4 வரை இந்த கூட்டம் நடக்க உள்ளது. இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் புதிய தொழில்நுட்பங்களை, குறிப்பாக உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது ஆகும்.
5G தொழில்நுட்பம் அதிவேகத்தில், தாமதத்தை தடுத்து தடையற்ற கவரேஜை அளிக்க உள்ளது. இது ஆற்றல் திறன், ஸ்பெக்ட்ரம் திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தேசிய பொது ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் மற்ற முக்கிய செய்தி சேனல்களுடன் இணைந்து இந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. காலை 10 மணிக்கு இந்த விழா தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான NCL-ல் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்!
Exams Daily Mobile App Download
5G தொழில்நுட்பம் முதல் கட்டமாக அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய 13 நகரங்களில் மட்டுமே செயல்பட உள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் கடந்த ஞாயிறு அன்று நடந்த கூட்டத்தில், இந்தியாவில் 5G தொலைத்தொடர்பு சேவைகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் 2 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் இந்த சேவைகள் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்