TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – மாதம் ரூ.56000 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் TNPSC யில் குறைந்தது மாதந்தோறும் ரூ. 56 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 26 ஆம் தேதியே கடைசி நாள் என்ற தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வாய்ப்பினை தகுதியானவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC:
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்து வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் குரூப் 2 தேர்வுகளுக்கான நாட்களை அறிவித்து இருந்தது. மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க பட்டு முழுமூச்சில் செயல்பட்டு வருகிறது. இந்த ஒரு தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் உள்ள படித்த பட்டதாரிகள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த TNPSC Group 2 தேர்வு அறிவிப்பு சென்ற மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
தமிழக அரசில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – மார்ச் 13 கடைசி நாள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் இந்த குரூப் 2 தேர்வுகளுக்கு பதவிகளாக, நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய 116 பணியிடங்கள் நிரப்பிட உள்ளன. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி புதிய அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. குறைந்தது மாதம் ரூ. 56 ஆயிரம் வழங்கப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 26ஆம் தேதியே கடைசி நாளாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பணி குறித்த விவரங்கள், அதில் உள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 29 ஆகும். மேலும் சம்பளத் தொகையாக மாதந்தோறும் ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரை வாங்கலாம் என்றும், கல்வி தகுதியாக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் முதுகலைப் பட்டம், பி.இ., கூடுதல் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வயது வரம்பாக எஸ்சி. எஸ் டி. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அனைத்து வகுப்பைச் சேர்ந்த விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது. மற்றவர்கள் 01.07.2022 அன்று 32 வயதை தாண்டி இருக்கக்கூடாது என்றும், பதிவுக் கட்டணமாக ரூபாய் 150 கொடுக்க வேண்டும் என்றும், மேலும் இதனை விண்ணப்பிக்க கடைசி தேதி 26.03.2022 ஆகும். தேர்வுக் கட்டணமாக ரூ 200 ஆன்லைனில் செலுத்த வேண்டும். மேலும் தேர்வு முறையாக எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.