தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.5000 உதவித்தொகை – முதல்வர் தொடக்கி வைப்பு!
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து கோவில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கான இலவச பேருந்து வசதி முதலியன அடங்கும். பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் தள்ளுபடி – சான்றிதழ் விநியோகம்! பொதுமக்கள் கவனத்திற்கு!
மின்சார துறையில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடத்த உத்தரவிடப்பட்டது போல பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் முதலியன செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கு குறைவாக உள்ள நகை கடன்களை தள்ளுபடி செய்வது குறித்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் – நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு!
இந்நிலையில் பல்வேறு துறைகளை தொடர்ந்து அரசு வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என தேர்வுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கோயில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 349 கோயில்களில் இருந்து 1,744 பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.