தமிழக கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் தள்ளுபடி – சான்றிதழ் விநியோகம்! பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பயிர்க்கடன் :
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மு க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வாங்கிய நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி நகை கடன் தள்ளுபடிகாக அரசு கடன் வாங்கியவர்கள் விவரங்களை கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் வழங்கியதில் பல மோசடிகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் – நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு!
இதனை ஆய்வு செய்ய அரசு சார்பில் மாவட்டம் தோறும் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு மாவட்டம் தோறும் ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளது தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் பெற்றதில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றது. இந்நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் மாவட்டத்தில் 46,903 விவசாயிகளுக்கு ரூ. 529.90 கோடி மதிப்பீட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயிா்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கும் பணியை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் நேற்று தொடங்கி வைத்தார். இதில், தற்போது 40,907 விவசாயிகளுக்கு ரூ. 451.88 கோடி மதிப்பீட்டில் பயிா்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.
Kasta panuvangaluku jewel loan thallupadi panala… Cha romba worst ..