தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5000 நிவாரணம் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நிவாரண நிதி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடலோர மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இரவு பகலாக இடைவிடாது பெய்த கன மழையால் நீர் நிலைகள் நிரம்பி மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மழை செல்ல வழியில்லாமல் தேங்கியது. இந்த நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். தண்ணீர் வீடுகளில் புகுந்ததால் மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர்.
இன்று முதல் ஜனவரி 7 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு திட்டவட்டம்!
மேலும் சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். டெல்டா மாவட்டங்களில் பல ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இந்த நிலையில் அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியை எதிர்பார்த்து தமிழக அரசு காத்திருந்தது. இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை முழுமையாக ஆராய்ந்த பிறகே நிவாரண நிதி வழங்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பொங்கல் பரிசு 2022! வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இந்த நிலையில் மழை நிவாரண நிதி வழங்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு தாமதம் காட்டுவது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த மத்திய குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்தது தகவல் ஏதும் வரவில்லை. மேலும் மத்திய அரசிடமிருந்து மழை மற்றும் வெள்ள நிவாரண நிதியை பெறுவதில் தமிழக அரசு அலட்சியமாக இருக்க கூடாது. தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும் என்று ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார்.