இன்று முதல் ஜனவரி 7 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு திட்டவட்டம்!
தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகள் அமல்படுத்தி உள்ளன. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலாக உள்ளது.
இரவு நேர ஊரடங்கு
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் பரவல் தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், குஜராத், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஓமைக்ரான் அதிகம் பரவாமல் தடுக்க பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றனர். அதன்படி கர்நாடகா மாநில அரசு ஓமைக்ரான் பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பொங்கல் பரிசு 2022! வழிகாட்டுதல்கள் வெளியீடு!
கர்நாடகா மாநிலத்தில் இன்று முதல் இன்னும் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது டிசம்பர் 28ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரையில் கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை மையங்கள், மதுபான விடுதிகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மேலும் அங்குள்ள பணியாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அத்துடன் கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும்.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு!
இதையடுத்து பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில்கள், விமானங்களின் சேவைகளுக்கு தடை கிடையாது. மேலும் அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கும் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் இரவு 10 மணிக்கு மேல் மெட்ரோ ரயில்கள் சேவை குறைக்கப்படும். இன்று முதல் திருமணங்கள், மாநாடுகள், கூட்டங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் 300 பேருக்கு மேல் அனுமதி இல்லை. அவசர தேவைகளுக்கு மட்டும் இரவு நேரங்களில் மக்கள் நடமாட வேண்டும் மற்ற நேரங்களில் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.