தமிழகத்தில் காவல்துறையினருக்கு ரூ.5000 உதவித்தொகை – ரூ.58.59 கோடி ஒதுக்கீடு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள போதும் களப்பணியாற்றிய 1,17,184 காவல்துறையினருக்கு தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க 58 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவல்துறை ஊக்கத்தொகை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மே மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அவசிய தேவைகளுக்கு வெளியே வருவோருக்கு இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டது.
ஜூன் 20 முதல் முடிவுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? வெளியான தகவல்!
வாகன ஓட்டிகளிடம் இ-பதிவு சோதனை செய்ய பல இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு காவல்துறையினர் இரவு, பகல் பாராமல் வேலை செய்தனர். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுவோர் மீது காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் பேரிடர் காலத்தில் தங்களது குடும்பங்களை விட்டு உயிரை துச்சமாக நினைத்து பணியாற்றிய காவல்துறையினருக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி கொரோனா பரவல் காலத்தில் களப்பணியாற்றிவரும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க 58 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் மூலம் காவல் துறையைச் சார்ந்த இரண்டாம் நிலை காவலர் முதல் காவல் ஆய்வாளர் என 1,17,184 காவல்துறை பணியாளர்கள் பயனடைவார்கள்.