ஜூன் 20 முதல் முடிவுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? வெளியான தகவல்!
தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 19ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளதால் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று அரசு வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டு வந்த நிலையில் மக்கள் நலன் கருதி கடந்த ஏப்ரல் மாதம் நடுவில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக நாளுக்கு நாள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 19ம் தேதி முதல் முடிவுக்கு வரவுள்ளது.
ஜூன் 21க்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள் – மாநில முதல்வர் இன்று மாலை அறிவிப்பு!!
இந்நிலையில் மாநிலத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 0 என நிலைக்கு வந்துள்ளது. மேலும் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 1500 க்கும் குறைவாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டு வருகிறது. எனவே நல்கொண்டா, கம்மம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களில் வருகிற 20ம் தேதி முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்று அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இதற்கு மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்க மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்கள் ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் மாநில மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.