தமிழகத்தில் நாளை மறுநாள் 500 மருத்துவமனைகள் திறக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் 500 அரசு மருத்துவமனைகள் திறக்கப்பட இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார்.
மருத்துவமனை திறப்பு:
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சி.டி. ஸ்கேன் மையம் அமைப்பது என பல்வேறு மருத்துவ செயல்பாடுகள் நவீன ரீதியாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள 25 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்பே அறிவித்திருந்தார். அதன்படி, புதிய அரசு மருத்துவமனைகள் அமைப்பதற்கு ரூ. 1,090 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
தமிழக ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு கணக்கு காட்டும் ஊழியர்கள் – நடவடிக்கை தீவிரம்!
மேலும், தமிழகம் முழுவதும் 708 மருத்துவமனைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் 500 மருத்துவமனைகளுக்கான பணிகள் மட்டும் நிறைவடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை மறுநாள் 500 அரசு மருத்துவமனைகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவித்திருக்கிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த மருத்துவமனைகளை திறந்து வைத்த பிறகு அனைத்து மருத்துவமனைகளும் மக்கள் சேவைக்கு தயாராகும். தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் விரைவில் நிறுவப்படும் எனவும் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.