சாம்சங் நிறுவனத்தில் 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி – NSDC ஒப்பந்தம்!
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகளை அளிக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (NSDC) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பயிற்சி:
கொரோனா தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இதனால் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தொழில் துறைகள் மெல்ல எழுச்சி பெற தொடங்கி உள்ளன. இதனிடையே இளைஞர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கில் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – நாளை மறுநாள் அறிவிப்பு!
தற்போது தகவல் தொழில்நுட்பம் (IT), மின்னணு துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்திய இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில் NSDC, சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. அதன்படி 50,000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 200 மணிநேர நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சியை பெற உள்ளனர். அதன்பிறகு சாம்சங் நிறுவனத்தின் சில்லறை கடைகளில் ஐந்து மாத வேலைவாய்ப்பு பயிற்சி மாதாந்திர உதவித்தொகையுடன் வழங்கப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மின்னணு துறையில் வேலைவாய்ப்புகளை பெற தேவையான புதிய திறன்களை பெற இளைஞர்களுக்கு இது உதவும் என்று சாம்சங் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்காக பள்ளி கல்வியை முடித்த இளைஞர்கள் மற்றும் நாடு முழுவதும் 120 மையங்களில் NSDC யின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.