கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 30 நாட்களில் ரூ.50 ஆயிரம் நிவாரணம் – உச்சநீதிமன்றம் உத்தரவு!!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும் உயிரிழப்புகள் தினசரி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 30 நாளில் ரூ.50,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நிவாரணம்:
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா வைரஸால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலைமையை சரி செய்ய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. மேலும் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி வருகின்றனர். பல மாநிலங்களில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் தினசரி 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அது 15 ஆயிரமாக குறைந்துள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழக அரசின் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு – ஆதரவு வேண்டி முதல்வர் கடிதம்!
இந்நிலையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் குமார் பன்சால் மற்றும் ரீபக் பன்சால் ஆகியோர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அதேப்போன்று நோய்த்தொற்றால் இறந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கானது, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் மிண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.50 ஆயிரம் மாநில பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்பட உள்ளது,’ என தெரிவித்தார்.
50 ரூபாயில் PVC ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்த மனு குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 30 நாட்களில் மாநில பேரிடர் நிதியிலிருந்து கொடுக்கப்படவுள்ள ரூ.50 ஆயிரத்தை வழங்க வேண்டும். இருப்பினும் இறப்பு சான்றிதழில் கொரோனாவால் உயிரிழந்தார் என்று கூறப்படவில்லை எனக்கூறி நிவாரணத்தை வழங்க மாநில அரசுகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது. ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் ‘கொரோனா மரணம்’ என குறிப்பிடவில்லை என்றாலும், இந்த நிவாரணத்தை பெறுவதற்கு உரிய அமைப்பை பாதிப்படைந்த குடும்பங்கள் அணுகலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.