தமிழக அரசு சார்பில் 50,000 ரூபாய் திருமண உதவித்தொகை – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் திருமண உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி முழு தொகையும் ரொக்கமாக வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு உதவித்தொகை:
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு முடித்து திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் 12ம் வகுப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.25,000 ரொக்கமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் ஏராளமான பெண்கள் பயன் பெற்றனர். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக தலைமையிலான அரசு இத்திட்டத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து விதவை மறுமணம் செய்தால் அரசு சார்பாக நிதியுதவி மற்றும் தங்கம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் போராட்டம்!
மேலும் திமுகவினர் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு நரிக்குறவர் இன மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண உதவித்தொகை 5,000 வரை உயர்த்தபட்டது. அதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரொக்கமாக வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் தேசிய சேமிப்பு பத்திரமும், 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டம் பெறாதவர்களுக்கு 25,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இதுவும் பாதித்தொகை காசோலையாகவும், ரொக்கமாகவும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திருமண உதவித்தொகை முழுவதும் ரொக்கமாகவே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது வரை பாதி ரொக்கமாகவும், மீது சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முழுவதும் ரொக்கமாகவே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திருமண உதவித்தொகை கோரும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.