தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் போராட்டம்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுவரை அரசு சார்பில் இது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் அரசு ஊழியர்கள் போராட்டம் களத்தில் இறங்கியுள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடியும் தருவாயில் அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு மாற்றியமைத்தது. அதன்படி தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அவர்களின் PF கணக்கில் சேமிக்கப்படும். இதனுடன் இந்த தொகைக்கு இணையாக அரசு சார்பாக குறிப்பிட்ட தொகை செலுத்தப்படும்.
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூன் மாதத்தில் 6 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
இதில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனால் அரசு ஊழியர்கள் தங்களுக்கு எந்தவித பலனும் கிடைப்பதில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திமுக தனது வாக்குறுதியில், ஆட்சி அமைத்ததும் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
Exams Daily Mobile App Download
ஆனால் இதுவரை இது தொடர்பாக அரசு சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது அத்துடன் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் முழங்கினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.