50% பணியாளர்களுக்கு கொரோனா தொற்று – வீட்டில் இருந்தே பணிபுரிய முடிவு!!
கொரோனா பாதிப்பு:
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலை பரவி வந்த காரணத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டின் முக்கிய பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது. மேலும், ஊரடங்கு அறிவிப்புக்கு பின்னர் தாக்கம் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் மார்ச் மாத தொடக்கம் முதல் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வந்தது.
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு வாட்ஸ்ஆப் மூலம் திறனறி தேர்வு – கல்வித்துறை விளக்கம்!!
இரண்டாம் அலை:
நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மிகவும் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 10 லட்சம் மக்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து 6 நாட்களாக ஒரே நாளில் ஒரு லட்சம் மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,32,27,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வகையில் புதிதாக 1,68,912 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. 904 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நீதிமன்றத்தில் கொரோனா:
நாட்டின் தலைநகரான புது டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் 50% பணியாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்ப்ட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று மட்டும் ஒரே நாளில் உச்ச நீதிமன்ற பணியாளர்கள் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதிபதிகள் அனைவரும் தங்களின் வீடுகளில் இருந்த படியே காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க உள்ளனர். நீதிமன்ற வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு தூய்மைபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்