தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு வாட்ஸ்ஆப் மூலம் திறனறி தேர்வு – கல்வித்துறை விளக்கம்!!
தமிழக பள்ளிகள்:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஏதும் சரிவர செயல்படாத நிலையில் அரசு இறுதி தேர்வுகளை ரத்து செய்து அறிவித்தது. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த அதிருப்தி நிலைக்கு உள்ளாகினர். மேலும், மாணவர்களை அடுத்த கல்வி ஆண்டில் எதன் அடிப்படையில் சேர்ப்பது போன்ற குழப்பங்கள் எழுந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வந்த காரணத்தால், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகள் தரம் உயர்த்துதல் – பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிக்கை!!!
திறனறி தேர்வு:
தமிழக மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்வதற்காக தமிழக அரசு 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இந்த சிறப்பு தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவதற்கு ஆலோசனை நடந்து வருகிறது. மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் கேள்விகளை அனுப்பி, பதில்களையும் மாணவர்கள் வாட்ஸ்ஆப் மூலமாகவே அனுப்ப வேண்டும். மாநில கல்வி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சி நிறுவனம் திறனறிவு தேர்வுக்காக பயிற்சி வினாக்களை தயாரித்து பள்ளிகளுக்கு அனுப்ப உள்ளது.
பெற்றோர்கள் கோரிக்கை:
இந்நிலையில், தமிழக பெற்றோர்கள் திறனறிவு தேர்வு குறித்து மாணவர்களுக்கு முன்னதாகவே அறிவித்திருக்க வேண்டும். போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் மாணவர்கள் தேர்வு குறித்து மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும் என்று கூறியுள்ளனர். திறனறிவு தேர்வு குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியிடவில்லை. அறிவிப்புகள் வந்தால் தேர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்